விலையில்லா அரிசி திட்டத்தை ஒழித்து கட்டவே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை!- டிடிவி தினகரன்

 

விலையில்லா அரிசி திட்டத்தை ஒழித்து கட்டவே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை!- டிடிவி தினகரன்

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டத்தால் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சீர்குலைந்துவிடும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மக்கள் பெற்று வரும் விலையில்லா அரிசி உள்ளிட்டவை கேள்விக்குறியாகி விடும் எனவும் தினகரன் கூறியுள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து இங்கே குவிந்திருக்கும் தொழிலாளர்களுக்கு ரேசன் பொருட்களில் கணிசமான பகுதியை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழக மக்களுக்கு கடுமையான பாதிப்பு எனக் கூறியுள்ள டிடிவி தினகரன், ஆரம்ப நிலையிலேயே இத்திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.