விற்கப்பட்ட தாய் -மீட்டெடுத்த மகன் -விபச்சார விடுதியில் நடந்த கண்ணீர் சம்பவம்

 

விற்கப்பட்ட தாய்  -மீட்டெடுத்த மகன் -விபச்சார விடுதியில் நடந்த கண்ணீர் சம்பவம்

விபச்சார விடுதியில் விற்கப்பட்ட தன்னுடைய தாயை, ஒரு மகன் மீட்டெடுத்த சம்பவம் பலரின் கண்களை குளமாக்கியது

விற்கப்பட்ட தாய்  -மீட்டெடுத்த மகன் -விபச்சார விடுதியில் நடந்த கண்ணீர் சம்பவம்

மேற்கு வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த விதவை தாயான நாற்பத்தைந்து வயது ஷில்பா ,அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் வீட்டு உதவியாளராகப் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தனது 21 வயது மகன் ஷ்ரவனின்  படிப்பு செலவுக்கு பற்றாக்குறையாக இருந்தது .அதனால் அவர் மகனுக்காக அதிக ஊதியம் கிடைக்கும் வேலையை தேடினார் .அதனால் கடந்த 2019 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் நல்ல ஊதியம் தரும் வேலை இருக்கிறது  என்று கூறிய சிலரால் அங்கு அழைத்து செல்லப்பட்டார் .ஆனால் அங்கு அவர்கள் அந்த பெண்ணை  விபச்சாரத்தில் தள்ளினார்கள் .அதனால் அந்த பெண் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் இந்த விபச்சார தொழிலில் சிக்கினார் .

இந்நிலையில் அவரின் தாயை  பிரிந்த அவரின் மகன் அவரை பல இடங்களில் தேடினார் .ஆனால் எங்கு தேடியும் தன்னுடைய தாயை கண்டுபுடிக்க முடியாமல் அவர் திண்டாடினார் .இந்நிலையில் அவரின் தாய் ஷில்பாவிடம் வந்த ஒரு வாடிக்கையாளர் ஒருவரிடம் அவர்  தன்னுடைய மகனை பற்றி கூறினார் .அதை கேட்ட அந்த கஸ்டமர் அவரின் மகனை தனக்கு தெரியுமென்று கூறினார் .

பின்னர் அந்த கஸ்டமர் வெளியே சென்று அந்த மகனிடம் அவரின் தாய் இருக்குமிடத்தை பற்றி கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மகன் அங்குள்ள காவல் துறையில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விட்டு, அந்த விபச்சார விடுதியில் அதிரடி சோதனை நடத்தி அவரின் தாயை மீட்டனர் .பின்னர் அவரை அவரின் மகனோடு அனுப்பி வைத்தார்கள் .பிறகு ஷில்பாவை மேற்கு வங்கத்திலிருந்து  விபச்சார நோக்கத்திற்காக விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் .

விற்கப்பட்ட தாய்  -மீட்டெடுத்த மகன் -விபச்சார விடுதியில் நடந்த கண்ணீர் சம்பவம்