விறுவிறு வாக்கு எண்ணிக்கை: முன்னிலை வகிக்கும் பாஜக!

 

விறுவிறு வாக்கு எண்ணிக்கை: முன்னிலை வகிக்கும் பாஜக!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ள  நிலையில் இன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது.  மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதே போல் தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த  22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது. 

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகே மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். .  இருப்பினும் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 8.15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 300 இடங்களிலும் காங்கிரஸ் 106  இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. மற்றவை 95 இடங்களில் முன்னனிலையில் உள்ளன. வாரணாசியில் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதியில் ராகுலும், ரேபரேலி  தொகுதியில் சோனியா காந்தியும்  முன்னிலையில் உள்ளனர். மதுராவில் பாஜக வேட்பாளர் ஹேமமாலினி முன்னிலையில் உள்ளார். அதே போல் லக்னோவில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத்சிங் முன்னிலை வகிக்கிறார்.