விறுவிறுப்பாக நடைபெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் !

 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும்  திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் !

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைவராகப் பதவியேற்ற பின்பு, அவர் தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைவராகப் பதவியேற்ற பின்பு, அவர் தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பொதுக் குழுக் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ஆக்கப்பணி கள், உள்ளாட்சித் தேர்தல், கழக சட்டதிட்ட திருத்தம் மற்றும் தணிக்கை குழு அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

 

கடந்த 6 ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொதுக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்து 11.11.2019 (இன்று) மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10:30 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டத்தில் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.