விரைவில் வருகிறது சென்னை – மதுரைக்கு அதிவேக விரைவு ரயில்: இத்தனை வசதிகளா?

 

விரைவில் வருகிறது சென்னை – மதுரைக்கு  அதிவேக விரைவு ரயில்: இத்தனை வசதிகளா?

இந்தியாவின் அதிவேக விரைவு குளிரூட்டப்பட்ட ரயிலான தேஜஸ் மதுரை – எழும்பூர் இடையே தனது சேவையை விரைவில் தொடங்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை: இந்தியாவின் அதிவேக விரைவு குளிரூட்டப்பட்ட ரயிலான தேஜஸ் மதுரை – எழும்பூர் இடையே தனது சேவையை விரைவில் தொடங்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக விரைவு ரயிலான தேஜஸ் ரயில் சேவை குறித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதில்  LED திரைப் பொருத்தப்பட்ட சொகுசான இருக்கைகள், வைஃபை மற்றும் உயர்தரமான கழிவறைகளைக் கொண்ட தேஜஸ் ரயில், சென்னை ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது வில்லிவாக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

train

200 கி.மீ வேகத்தில் இயங்கக் கூடிய இந்த ரயில் தொடக்கத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வாரத்துக்கு ஐந்து நாள்கள் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரக் காலத்துக்குள் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில், சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் என்றும் மதுரை ரயில் நிலையத்தை ஆறரை மணி நேரத்தில் சென்று சேர்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு அன்று இரவு மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து சேரும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ரயில் தொடக்கத்தில் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் எனவும் பின்னர் வழக்கமாக இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன் முதல் சேவையை மும்பைக்கும் கோவாவுக்கும் இடையே தொடங்கியது. தற்போது தமிழகத்திலும் அறிமுகப்படுத்தித் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.