விரைவில் பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

விரைவில் பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றையும் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட வீரபாண்டிய பட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் பேரில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்   ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். அதேபோல் நாளை  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றையும் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

ttn

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர்   எடப்பாடி கலந்துகொண்டு திறந்து வைக்க உள்ள மருத்துவ சிகிச்சை பிரிவுகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ttn

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘பத்திரிகை உலகின் ஜாம்பவான் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் நாளை திறந்து வைக்கப்படுகிறது. அதைப்போல பத்திரிகையாளர் நலனுக்காக நல வாரியம் அமைப்பது குறித்து முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு வெளியிட்டதைத் தொடர்ந்து நல வாரியம் அமைப்பது குறித்த அம்சங்களை ஆராய்வதற்காகக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார். அந்தக் குழு ஆய்வு செய்து விரைவில் தங்களுடைய அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. அறிக்கை வந்ததும் அதில் அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைக்கப் பெற்று விரைவில் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்’ என்றார்.