விரைவில் நடமாடும் டாஸ்மாக் கடை!  மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர்- தனியரசு எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!!

 

விரைவில் நடமாடும் டாஸ்மாக் கடை!  மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர்- தனியரசு எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!!

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். 

பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தில் பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டிப்பார்த்தனர். ஆனால் எட்டிப்பார்த்த வடநாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார். ஏழை விவசாயி, விவசாயிகளின் செல்லப்பிள்ளை எடப்பாடி பழனிசாமி  என முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டினார். அதன் பின் பேசிய அவர், தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும். மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.