விருந்தில் கோழிக்கறி: கலவர பூமியாக மாறிய திருமண மண்டபம்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

விருந்தில் கோழிக்கறி: கலவர பூமியாக மாறிய திருமண மண்டபம்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் பதில் கோழிக்கறி பறிமாறியதால் மணமகன்- மணமகள் வீட்டார் இடையே கடும் மோதல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா: திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில்  கோழிக்கறி பறிமாறியதால் மணமகன் – மணமகள் வீட்டார் இடையே கடும் மோதல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள உப்புசாகு கிராமத்தில் பிரவீன், அஜ்மீரா ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் தரப்பில் மது அருந்தி விட்டு வந்த சிலர், ஏன் ஆட்டுக்கறி சமைக்கவில்லை என்று கேட்டு தகராறில் ஈடுப்பட்டனர்.

briyani ttn

அதற்கு போதிய பணம் இல்லாததால் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி விருந்து போட்டோம் என்று மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர்.  இதனால் கோபம் அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருடன் தீவிர வாக்கு வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

telagana marriage ttn

அப்போது  பந்தல் கட்டைகளை பிடுங்கியும், நாற்காலிகளை தரையில் வீசியும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதால் காயமடைந்தவர்களுக்கு புர்கம்பாடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புர்கம்பாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

marriage ttn

திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தி, சாப்பிட்டு விட்டு செல்லாமல், மது போதையில் தகராறு செய்து திருமண விழாவில் கலவரம் ஏற்படுத்தியது இரு வீட்டார் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.