விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து.. 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

 

விருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து.. 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருக்கத்தின் போது, விருதுநகர் மாவட்டத்தில் ஜமீன் சல்வார்பட்டியில் ரவீந்திரா என்ற பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருக்கத்தின் போது, விருதுநகர் மாவட்டத்தில் ஜமீன் சல்வார்பட்டியில் ரவீந்திரா என்ற பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனி அறையில் சங்கு சக்கர பட்டாசுக்கு மருந்து செலுத்திக் கொண்டிருந்த முத்துப்பாண்டி என்னும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று விருது நகரில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. 

ttn

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் சூரிய பிரபா என்னும் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அப்பகுதியை சேர்ந்த பல பேர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல தொழிலாளிகள் வேலைக்குச் சென்ற நிலையில் திடீரென அங்கு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஆலையிலிருந்து வெளியே தெறித்து ஓடியுள்ளனர்.

ttn

இந்த விபத்தின் காரணமாக 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மாள், விஜயகுமார் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.