விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் யார் தெரியுமா? வெளியான விபரம்!

 

விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் யார் தெரியுமா? வெளியான விபரம்!

எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் யார் என்று அடையாளம் தெரிந்துள்ளது

புதுடெல்லி: எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் யார் என்று அடையாளம் தெரியவந்துள்ளது.

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரிலிருந்து  கென்யா தலைநகர் நைரோபிக்கு நேற்று புறப்பட்டது. 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள்.

accident ttn

இதில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், கென்யாவைச் சேர்ந்த 32 பேர், கனடாவைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர், இந்தியா, ஸ்லோவோகியா நாடுகளைச் சேர்ந்த தலா 4 பேர்  உயிரிழந்தனர்

இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள், வைத்யா பனகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றம் ஷிகா கார்க். இதில், ஷிகா கார்க் என்பவர் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகராக உள்ளார். இவர் நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தாக  தகவல் வெளியாகியுள்ளது.

நுகவராப்பு மனிஷா, ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்.  மனிஷாவின்  உறவினர்  அவினாஷ், மனிஷா பற்றி தகவல் அறிய அவரது பெற்றோர் காத்திருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு டீவிட் செய்துள்ளார். மற்ற இரண்டு பேர் பற்றிய தகவல் உடனடியாக கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது