விமான நிலையம் செல்லாத ஓபிஎஸ்.. வீட்டிற்கு சென்று முதல்வரை சந்தித்தார்!

 

விமான நிலையம் செல்லாத ஓபிஎஸ்.. வீட்டிற்கு சென்று முதல்வரை சந்தித்தார்!

அமெரிக்கா, லண்டன், துபாய் என்று 13 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி இன்று சென்னை திரும்பினார்.

அமெரிக்கா, லண்டன், துபாய் என்று 13 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி இன்று சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்காதது அ.தி.மு.க கட்சித் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பே துணை முதல்வர், விமான நிலையத்திற்கு முதல்வரை வரவேற்க வராததன் காரணம் என்ற செய்தி பரவியது.

இந்நிலையில் அ.தி.மு.க  கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், சென்னை ராஜ அண்ணாமலைப் புறத்திலுள்ள முதல்வரின்  வீட்டிற்கே  சென்று அவரை சந்தித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.