விமர்சனங்களால் வெளுத்து வாங்கும் ‘ப்ளூ சட்டை’மாறன், அடுத்து என்ன பண்ணப் போறார்னு தெரியுமா!?

 

விமர்சனங்களால் வெளுத்து வாங்கும் ‘ப்ளூ சட்டை’மாறன், அடுத்து என்ன பண்ணப் போறார்னு தெரியுமா!?

வெள்ளிக்கிழமை ஒரு படம் வெளியான கொஞ்ச நேரத்திலேயே தியேட்டரில் படம் பார்க்கிற ஆள்லருந்து ஆளாளுக்கு படத்தைப் பற்றி விமர்சனம் எழுத ஆரம்பித்து விடுவார்கள். நல்லா இருந்தால் நல்லவிதமா வரும், இல்லேன்னா நிலைமை ரொம்ப மோசமாகிடும்! 

இயக்குனர் டி.ராஜேந்தரின் ‘மைதிலி என்னை காதலி’ படத்தில் வெண்ணிறாடை மூர்த்தி ‘பொண்ணப் பெத்தவன் சம்பந்தி கிட்டாதான் பயப்படுவான்…இப்பிடி சம்பந்தா சம்பந்தமில்லாத ஆளுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கே’ என்று ஒரு டயலாக் சொல்வர். அது அப்படியே இன்னைக்கிருக்கிற சினிமா தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனருக்கும் பொருந்தும்! 

எப்படின்னு கேட்கிறீங்களா? வெள்ளிக்கிழமை ஒரு படம் வெளியான கொஞ்ச நேரத்திலேயே தியேட்டரில் படம் பார்க்கிற ஆள்லருந்து ஆளாளுக்கு படத்தைப் பற்றி விமர்சனம் எழுத ஆரம்பித்து விடுவார்கள். நல்லா இருந்தால் நல்லவிதமா வரும், இல்லேன்னா நிலைமை ரொம்ப மோசமாகிடும்! 

ஆர்ட்டிஸ்ட் படங்கள் என்றால் அடுத்த நாளே, வரிசையாக கலெக்சன் ரிப்போர்ட்டும் வந்திரும்! சில ஆன் லைன் விமர்சனங்கள் இன்னும் அதிரி புதிரியாக இருக்கும். அப்படிப் பட்டவர்களில் எல்லோரும் எதிர்பார்ப்பது ‘ப்ளூ சட்டை’மாறன் படத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கிறது. அவரது வலைத்தளம் இனிமேல் சந்தா கட்டினால்தான் பார்க்க முடியும் என்ற லெவலுக்கு இருக்கு என்றால் அவரது விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

அவர், விரைவில் ஒரு திரில்லர் படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக களம் இறங்கப்போகிறார். ’ப்ளூ சட்டை’ மாறனாகவே ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது ‘அதெல்லாம் நமக்கு ஒத்து வராதுங்க’ என்று அவருக்கே உரிய ஸ்டைலில் வெள்ளந்தியாக சொல்லி அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் ஒர்க் முடிந்துவிட்டது.

சினிமாவில் அதிரடியான தயாரிப்பாளர் ஒருவர் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். பொதுவாக, விமர்சகர்களுக்கு  படம் எடுக்கத் தெரியாது என்று தமிழ் சினிமாவில் பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது!

அண்ணன் ‘ப்ளூ சட்டை’ மாறன் அந்த நினைப்பை பொய்யாக்குவாரா பார்ப்போம்!