விபத்து அல்ல கொலை – டெல்லி விபத்தில் புதிய திருப்பம்

 

விபத்து அல்ல கொலை – டெல்லி விபத்தில் புதிய திருப்பம்

டெல்லி கார் விபத்தில் பலியான ரஞ்சனா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

டெல்லி கார் விபத்தில் பலியான ரஞ்சனா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அது விபத்து இல்லை திட்டமிட்ட கொலை என்று அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கார் விபத்து 

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய உபேந்திர மிஷ்ரா என்பவரின் கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து காரை ஓட்டிவந்த உபேந்திரா உடனடியாகக் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு முன் இருக்கையில் அமர்ந்திருந்த தன் குழந்தையுடன் வெளியேறிவிட்டார். இந்த விபத்தில் மிஷ்ராவின் மனைவி ரஞ்சனா மற்றும் ரிதி, நிக்கி என்ற இரு குழந்தைகளும் உடல் கருகி உயிரிழந்தனர். 

இந்நிலையில்  இது விபத்து இல்லை திட்டமிட்ட கொலை என மரணித்த ரஞ்சனாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லி

உறவினர்கள் சந்தேகம் 

கடந்த 13 வருடத்தில் நேற்று முன்தினம் தான் மனைவி ரஞ்சனாவை, உபேந்திரா முதல்முறையாக வெளியில் அழைத்துச் சென்றதாக ரஞ்சனாவில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ப்ராஜ் கிஷோர் தீக்‌ஷித் என்பவர் பேசும் போது, `ரஞ்சனாவுக்கும், உபேந்திராவுக்கும் 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. உபேந்திரா ஒரு கார் ஷோரூமில் வேலை செய்கிறார். ரஞ்சனா இல்லத்தரசியாக உள்ளார். இருவருக்கும் திருமணம் முடிந்த பிறகு தற்போதுதான் முதல்முறையாக வெளியில் சென்றுள்ளனர். 

இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது அப்போதிலிருந்தே உபேந்திரா, ரஞ்சனாவை ஆண் குழந்தை வேண்டும் எனக் கேட்டு அதிகமாகத் துன்புறுத்திவந்தார். இதை விபத்து என எங்களால் ஏற்க முடியாது. இது திட்டமிட்ட கொலை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

டெல்லி விபத்து

ரஞ்சனாவின் மற்றோர் உறவினரான ஷ்யாம், விபத்து பற்றி கூறியதாவது, `உபேந்திரா பலமுறை ரஞ்சனாவை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். கொன்றுவிடுவேன் எனப் பல முறை மிரட்டியுள்ளார். தற்போது அவரே காரின் கேஸ் சிலிண்டரைத் திறந்துவிட்டு தீப்பிடிக்க வைத்திருக்க வேண்டும். உபேந்திரா, ரஞ்சனாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகம் துன்புறுத்தியுள்ளார். அவருக்கு வேறொரு பெண்ணுடன் நட்பு உள்ளது. இவை அனைத்தும் எங்களுக்குத் தெரியும். இருந்தும் உபேந்திராவை எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. அவன் ரஞ்சனாவையும், குழந்தைகளையும் எதாவது செய்துவிடுவான் என்ற பயத்தில் இருந்தோம்’ எனக் கூறியுள்ளார்.

காவல்துறை விசாரணை 

ஆனால், உபேந்திரா, என் மனைவி மற்றும் குழந்தையை நான் ஏன் கொல்ல வேண்டும். இது அப்பட்டமான விபத்து. நான் அவர்களைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்று தோற்றுப்போனேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டி.சி.பி ஜஸ்மீத் சிங் பேசும் போது, `இது கொலையாக இருக்கலாம் என எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அந்தக் கோணத்திலும் நாங்கள் விசாரணை நடத்தவுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.