விபத்துக்குள்ளான லாரியில் செம்மரக்கட்டைகள்! அதிர்ந்த போலீசார்!
Nov 16, 2019, 18:58 IST1573910927000
தமிழகத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று தருமபுரி மாவட்டம் சவுளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாயின. விபத்து பற்றி தகவலறிந்து தேசிய நெடுஞ்சாலை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துச் சென்றனர். அப்போது விபத்துக்குள்ளான இரண்டு லாரிகளில், ஒரு லாரியில் 32 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரியில் செம்மரக்கட்டைகள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர்.