விபத்தில் சிக்கி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி..கணவனுக்கு நேர்ந்த சோகம் : கண் கலங்க வைக்கும் சம்பவம்!

 

விபத்தில் சிக்கி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி..கணவனுக்கு நேர்ந்த சோகம் : கண் கலங்க வைக்கும் சம்பவம்!

நேற்று காலை கர்ப்பிணியாக இருக்கும் மணிமேகலையைப் பரிசோதனை செய்வதற்காக  கௌதம் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌதம்(29). இவருக்குக் கடந்த ஆண்டு மணிமேகலை (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குத் திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகும் நிலையில், மணிமேகலை நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று காலை கர்ப்பிணியாக இருக்கும் மணிமேகலையைப் பரிசோதனை செய்வதற்காக  கௌதம் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுடன் மணிமேகலையின் சித்தப்பா மற்றும் சித்தி சென்றுள்ளனர். 

ttn

இவர்கள் காரில் மேட்டுக்கடை பி.வி.ஏ வாய்க்கால் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே ஒரு கார் வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த மணிமேகலையின் சித்தப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மணிமேகலை மற்றும் அவரது சித்தி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், பலத்த காயம் அடைந்த கௌதமை பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

tt

இதனிடையே விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியால் பிரசவ வலியில் துடித்த மணிமேகலை, பிரசவ தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னரே பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால், மணிமேகலை குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்னரே கௌதம் மூளைச்சாவால் உயிரிழந்துள்ளார். 

ttn

பெற்ற குழந்தையைப் பார்க்காமல் கணவன் இறந்த துக்கத்திலும் மணிமேகலை, கௌதமின் உடல் உறுப்புகளை தானம் செய்யச் சம்மதித்துள்ளார். அதனால், அவரின் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு 9 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.