விபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் சஞ்சீவ்! சோகத்தில் ரசிகர்கள்!

 

விபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் சஞ்சீவ்! சோகத்தில் ரசிகர்கள்!

பிரபல ராஜா ராணி சீரியல் நடிகர் சஞ்சீவுக்கு எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

சென்னை: பிரபல ராஜா ராணி சீரியல் நடிகர் சஞ்சீவுக்கு எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், “ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். முன்னதாக மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார். 

alya and sanjeev

இதையடுத்து ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திகை ஆல்யா மானசா காதலித்து வருகிறார். இதை இருவருமே உறுதி செய்து பல நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். சமூகவலைத்தளத்தில் எப்போதும் படு சுறுசுறுப்பாக இருக்கும் சஞ்சீவ் சமீபகாலமாக புகைப்படங்களைப் பகிராமல் இருந்து வந்துள்ளார். இதனால் சோகம் அடைந்த அவரது ரசிகர்கள் சஞ்சீவுக்கு என்ன ஆயிற்று என்று கேள்விகள் எழுப்பி வந்தனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Il get back soon with all your prayers ?

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

இந்நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் “நான் விபத்தில் சிக்கிக் கொண்டேன் ஆனால் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை, உங்களது பிராத்தனையால் நான் நலமாகி வருவேன் என பதிவு செய்துள்ளார்”. இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.