விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5,000 சன்மானம்!

 

விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5,000 சன்மானம்!

விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ரூ. 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி : விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவருக்கு ரூ. 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

puducherry cm

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 2019 – 2020 க்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் மீன்பிடி இடைக்கால நிவாரணம் ரூ.5,500-ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த அவர் மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.2,500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார். மேலும் விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

accident

இதேபோல் காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

puducherry

முன்னதாக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.