விபத்தில் சிக்கியவருக்குத் தையல் போடும் துப்புரவு பணியாளர் : வைரலாகும் வீடியோ !

 

விபத்தில் சிக்கியவருக்குத் தையல் போடும் துப்புரவு பணியாளர் : வைரலாகும் வீடியோ !

துப்புரவுப் பணியாளர் ஒருவர்  காக்கி சட்டை அணிந்த படி கார்த்தீபனுக்கு சிகிச்சை அளித்து தையல் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள பெரியாளூரைச் சேர்ந்த ஆர்.கார்த்தீபன் என்பவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரின் பைக் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.

helmet

அதில் படுகாயம் அடைந்த கார்த்தீபனை மீட்டு பொதுமக்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த துப்புரவுப் பணியாளர் ஒருவர்  காக்கி சட்டை அணிந்த படி கார்த்தீபனுக்கு சிகிச்சை அளித்து தையல் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

stitch

விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்ற அவசியம் மற்றும் அவசரம் கருதி துப்புரவுப் பணியாளர் தையல் போட்டிருந்தாலும், அங்கிருந்த மருத்துவர்கள் அதனை அனுமதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைகளைக் கவனிக்கக் கூட போதிய மருத்துவர்கள் இல்லாததற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக அம்மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.