விநாயகர் சதுர்த்தி வசூலில் தகராறு: சொந்த கட்சி உறுப்பினரையே குத்திக் கொன்ற பாஜக நிர்வாகி!

 

விநாயகர் சதுர்த்தி வசூலில் தகராறு: சொந்த கட்சி  உறுப்பினரையே குத்திக் கொன்ற பாஜக நிர்வாகி!

கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் பாஜக உறுப்பினரை அக்கட்சியின் நிர்வாகியே குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் பாஜக உறுப்பினரை அக்கட்சியின் நிர்வாகியே குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை ஆலந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி வசூலில் எஞ்சிய பணத்தை வைத்து மதுவுடன் கிடா விருந்திற்கு பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது விநாயகர் சதுர்த்திக்கு திரட்டப்பட்ட நிதி தொடர்பான வரவு, செலவு கணக்கு பார்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது பாஜக உறுப்பினர் நாகராஜ் என்பவரை, மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் கந்தசாமி என்பவர் காலி பீர் பாட்டிலால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த நாகராஜை, உடனிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்துள்ளார். 

இதற்கிடையே தலைமறைவான பாஜக நிர்வாகி கந்தசாமியை, போலீசார் தேடி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.