விநாயகரை கேலி செய்த சந்திரன்… என்ன ஆச்சு தெரியுமா? இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா!

 

விநாயகரை கேலி செய்த சந்திரன்… என்ன ஆச்சு தெரியுமா? இன்னமும் சங்கடத்தில் நெளியுது நிலா!

இந்து மதத்தில் மட்டும் தான் பல்வேறு வடிவங்களில், பக்தர்களுக்குப் பிடித்தாற் போல பல கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஏன் முழு முதற் கடவுளாக விநாயகரைப் பார்க்கிறோம். எந்தவொரு காரியங்களையும் செய்வதற்கு முன்னால், கணபதியை வணங்கிய பின்னர் தான் துவங்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள். இந்த முக்கிய விதிக்குப் பின்னால் ஒரு புராண கதை இருக்கிறது. இந்தக் கதையைத் தெரிந்துக் கொண்டால், பிள்ளையார் ஏன் சந்திர பகவானுக்கு சாபம் கொடுத்தார் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்து மதத்தில் மட்டும் தான் பல்வேறு வடிவங்களில், பக்தர்களுக்குப் பிடித்தாற் போல பல கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஏன் முழு முதற் கடவுளாக விநாயகரைப் பார்க்கிறோம். எந்தவொரு காரியங்களையும் செய்வதற்கு முன்னால், கணபதியை வணங்கிய பின்னர் தான் துவங்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள். இந்த முக்கிய விதிக்குப் பின்னால் ஒரு புராண கதை இருக்கிறது. இந்தக் கதையைத் தெரிந்துக் கொண்டால், பிள்ளையார் ஏன் சந்திர பகவானுக்கு சாபம் கொடுத்தார் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.

god

ஒரு நாள் சந்திரன் தன் குளுமையான ஒளியை வீசிக் கொண்டிருந்த போது, மூஷிக வாகனத்தில் பால கணபதி சென்று கொண்டிருந்தார்.  அப்போது குறுக்கே அவருக்கு முன்னால் ஒரு பாம்பு வேகமாக செல்ல முயற்சித்தது. பால கணபதியின் முஷிகன் பாம்பைப் பார்த்து பயந்து போய் திடீரென பாதி வழியிலேயே நின்று விட்டது. அதன் மீது அமர்ந்திருந்த பால கணபதி கீழே விழுந்தார். அவர் வைத்திருந்த மோதங்களும் கீழே விழுந்ததில் சிதறின. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் பால கணபதியைப் பார்த்து சிரித்தார். தான் கீழே விழ காரணமாக இருந்த பாம்பை பிடித்து, மோதகங்கள் உள்ளை பையை தன் இடுப்பில் கட்டிக் கொள்ளப் போவதாக கூறியதும், பாம்பு பயந்து ஓடியது. அதை பிடிக்க முயலும் போது மீண்டும் விழ நேர்ந்தது. அப்போதும் சந்திரன் கணபதியைப் பார்த்து, ‘குண்டு கணபதி… கொழுகட்டை போல இருப்பதால் விழுந்து விட்டான்’ என சிரித்தார். 
இதனால் கோபமடைந்த பால கணபதி, என் உருவத்தை பார்த்தா பரிகசிக்கிறாய் என சந்திரனைப் பார்த்து, உன் ஒளி பொருந்திய மேனி தானே உன் சிறப்பு. அதன் செருக்கினால் தானே நீ ஏளனம் செய்கிறாய்… இனி உன் ஒளி மங்கி போகட்டும். ஒளி மங்கிய உன்னை காண்பவர்களுக்கும் இனி வாழ்க்கையில் சங்கடங்கள் உண்டாகட்டும் என்று சபம் அளித்தார். 

god

தான் கேலி செய்யவில்லை, உங்களின் குழந்தை விளையாட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். என்னை மன்னியுங்கள் என்று சந்திரன் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும், என்னால் கொடுத்த சாபத்தை முழுவதுமாக திரும்ப பெற முடியாது. உன் ஒளி மங்கி மீண்டும் பெருகட்டும், ஒளி குறைவதை அமாவாசை (தேய்பிறை) என்றும், முழு ஒளியுடன் இருப்பது பெளர்ணமி (வளர்பிறை) என்றும் அழைக்கப்படும் என கணபதி, மனமிறங்கி சந்திரனுக்கு அருளினார். 
அன்றில் இருந்து சந்திரனான நிலவின் ஒளி தேய்ந்து தேய்ந்து கடைசியில் அமாவாசையாகவும், பின் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிள்ளையாரின் அருளினால் முழு நிலவாக மாறி பெளர்ணமியாகவும் ஒளி வீசத் துவங்கி பின் மீண்டும் தேய்ந்து வளர ஆரம்பித்தது.