விதி ரேகைகளின் விளைவே விபரீத ராஜ யோகம்!

 

விதி ரேகைகளின் விளைவே விபரீத ராஜ யோகம்!

ஜோதிட கணிதத்தில் கூறப்படும் மிக சில உன்னத யோகங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது விபரீத ராஜ யோகம் ஆகும். இந்த விபரீத ராஜ யோகம் ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அவர் எந்த மாதிரியான பலன்களை அடைவார் என்பதினை பற்றி இந்த பதிவில் பார்போம்.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர்.  ஜாதகரின் எட்டாம் பாவம் 2,4,6,10ம் பாவமுனைகளை தொடர்புகொண்டால் இவர்களுக்கு வாழ்வில் திடீர் அதி தனயோகம் அமைந்து விடும். 

vibaritha raja

சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, திடீர் கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும்.சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம் இந்த நிலையில் நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். 

முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம்.பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர்.

 

vibaritharaja

தொழில் தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிவை:

முதலில் ஒருவர்க்கு வேலை செய்யும் யோகம் உண்டா? இல்லையா? அல்லது தொழில் செய்வாரா என்பதை நல்ல ஜோதிடரை அனுகி அறிய வேண்டும்.தொழில் கொடுப்பினையை பார்ப்பதற்கு 6 மற்றும் 7ம் பாவ முனைகளை, 10ம் பாவ முனைகளுடன் இணைத்து ஆராய வேண்டும்.

இந்த பாவங்கள் பொருளாதாரத்திற்கு மிகவும் கொடிய ஸ்தானமான 5,9ம் பாவங்களை தொடர்பு கொண்டும்,தொழிலுக்கான காரக கிரகங்களும் முழுமையாகக் கெட்டிருந்தால் வேலை வெட்டிக்குப் போகாமல் ஊரைச் சுற்றிவிட்டு வந்து வீட்டில் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கும் சுகவாசியாக இருப்பார். 

vibareetha

ஆகவே விதியின் கொடுப்பினைதான் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்கின்றன என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.பல வருடங்கள் சேமித்த பொருளைக் கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, 

முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா? தொழிலால் லாபம் கிடைக்குமா? கூட்டுத் தொழில் வெற்றி தருமா? என்பதையெல்லாம் கருத்தில் கொள்வது பாதுகாப்பானது.அவசரக் கோலத்தில் தொழில் தொடங்கி, முடங்கிப்போனவர்கள் ஏராளம். 

விதிகொடுப்பினையும், தசாபுக்திகளும் சாதகமா உள்ளதா என்று ஆராய வேண்டும்.தொழில் தொடங்கிய காலம் தொட்டு தொடர்ந்து வரும் தசாபுக்திகளும் சாதகமாக தொடர்ந்து அமையுமா என்பதை அவசியம் அறிய வேண்டும்.

பத்தாம் பாவமுனை, ஒருவரின் ஜாதகத்தில், ஜாதகர் தன் வாழ்க்கையில் செய்ய இருக்கும் தொழிலை அல்லது வேலையைக் வெற்றிகரமாக செயல்படுத்வாரா என்பதை குறிக்கும்.

rajayogam

அந்த இடத்தை, அதன் இயற்கைத் தன்மையை, அதன் உப அதிபதியை, அவர் தொடர்புகொண்டுள்ள பாவங்களையும், சம்பாத்திய காரகன் சூரியனின் நிலையையும், தனகாரகன் குரு மற்றும் சுக்கிரனையும் பொறுமையாக ஜாதகத்தில் அலசுவதன் மூலம் ஒருவரின் கோடிஸ்வர யோகத்தை எளிமையாக அறியலாம்.

அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறியலாம்.

விதி கொடுபினையுடன் தசாபுக்திகளையும் இணைத்தே ஆராய வேண்டும். அதனுடன் ஜாதகரின் லக்ன கொடுப்பினை மற்றும் பாக்கிய ஸ்தானத்தையும் இணைத்தே ஆராய வேண்டும்.

ஜாதகர் தொடர்ந்து தொழிலில் வெற்றி அடைவாரா என்று உறுதிபடுத்த, மிகவும் முக்கிய ஆய்வான பாவ முனை விரிவுகள் மற்றும் கிரக விரிவுகளை அவசியம் ஆராய வேண்டும். 
இது உயர்நிலை ஆய்வுகள் என்றாலும் அவசியம் ஆராய்ந்து தாசாபுக்திகளின் உச்சபச்ச பலனை அறிய வேண்டும்.

vibaritharajayogam

உத்தியோகத்தில் அல்லது தொழிலில் எந்த அளவிற்கு ஜாதகர் உயர்வார் என்று பார்ப்பதற்கும், எந்த வயதில் உயர்வார் என்று பார்ப்பதற்கும் இது உதவும்.எந்த தசா புத்தி காலத்தில் மேன்மை அடைவார் அல்லது வீழ்ச்சியடைவார் என்று பார்ப்பதற்கும் உதவும்.

ஒருவர் எண்ணியது நடந்தாலும் நடக்காவிட்டாலும்,எண்ணாதது நடந்தாலும், யாவும் அவரவர் விதி ரேகைகளின் விளைவே.முயற்சி கால் பங்கு விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.
எல்லாவற்றுக்கும் கால நேரம் வர வேண்டும்.இவர்கள் முறையாக ஜாதக ஆய்வை செய்து தொழிலில் இறங்கினால் வெற்றி மேல் வெற்றிதான்.