விதிகளை மீறி வைக்கப்பட்ட அதிமுக பேனர்.. உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட போலீஸ்!

 

விதிகளை மீறி வைக்கப்பட்ட அதிமுக பேனர்.. உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட போலீஸ்!

கடந்த ஆண்டு சென்னை பள்ளிக்கரணையில் பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு சென்னை பள்ளிக்கரணையில் பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அனுமதியின்றியோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு இடங்களிலோ பேனர் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின் சில மாதங்களாகப் பேனர் கலாச்சாரம் இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 

ttn

நாளை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக மதுரை மாவட்டம் மேலூர் அருகே பல பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன. அதில் சில பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. பேருந்து நிறுத்தம், சிங்கம்புணரி சாலை, கம்பூர் சாலை உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.