விட்டுவிடுங்கள் என கெஞ்சிய பெண் பத்திரிகையாளர்.. கேட்காத சபரிமலை போராட்டக்காரர்கள் – வைரலாகும் வீடியோ!

 

விட்டுவிடுங்கள் என கெஞ்சிய பெண் பத்திரிகையாளர்.. கேட்காத சபரிமலை போராட்டக்காரர்கள் – வைரலாகும் வீடியோ!

சபரிமலை போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளரின் வாகனத்தை போராட்டக் காரர்கள் தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

பத்தனம்திட்டா: சபரிமலை போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளரின் வாகனத்தை போராட்டக் காரர்கள் தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியருந்தது. தீர்ப்பிற்குப்பின் முதன்முறையாக மார்கழி மாத பூஜைக்காக நேற்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.   

அப்போது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என ஆண் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கலவர பூமியாக மாறிய பம்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்பிற்காக கமாண்டோ போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது இதுகுறித்த செய்திகளை சேகரிப்பதற்காக, தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் தன் அலுவலக வாகனத்தில் அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

ஆனால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்த போராட்டக்காரர்கள், பெண் பத்திரிகையாளரை ஆபாசமாகத் திட்டியது மட்டுமல்லாமல் அவர்களின் வாகனத்தையும் தாக்கியுள்ளனர்.

எங்களை விட்டுவிடுங்கள் என கெஞ்சியும், அவர்களின் வாகனம் மீது போராட்டக்காரர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், சபரிமலையின் மாண்பை அறியாத ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்பினர் தான் அந்த போராட்டத்தை கலவரமாக மாற்றியதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.