விடிய விடிய வாக்கு எண்ணிக்கை… நாளையும் தொடரும்- மாநில தேர்தல் ஆணையர்!
Jan 2, 2020, 18:43 IST1577970791000
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இரவிலும் வாக்கு என்னும் பணி தொடரும். நாளையும் வாக்கு எண்ணிக்கைந் நடைபெறும். எனவே வாக்கு எண்ணும் பணியில் இருக்க வேண்டிய நபர்கள், அவர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ்கள் உடனடியாக வழங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிப்பதற்கு எந்த கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களையும் சேர்த்து வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை வார்டு உறுப்பினர் :- 19734, ஊராட்சி தலைவர் :- 1141, ஒன்றிய கவுன்சிலர் :- 208 ” என்று கூறினார்.