விடாமல் துரத்திய பேய்… கிணற்றில் குதித்த இளைஞர்… அதிரவைக்கும் பகீர் உண்மை! 

 

விடாமல் துரத்திய பேய்… கிணற்றில் குதித்த இளைஞர்… அதிரவைக்கும் பகீர் உண்மை! 

கன்னியாகுமரி அருகே இளைஞர் ஒருவரை பேய் துரத்தியதால் அவர் கிணற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி அருகே இளைஞர் ஒருவரை பேய் துரத்தியதால் அவர் கிணற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அயனிவிளை பகுதியை சேர்ந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் தனது வேலைகளை முடித்துவிட்டு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையின் அருகே இருந்த கிணற்றிலிருந்து சத்தம் வருவதை உணர்ந்த அவர், கிணற்றிற்கு அருகே சென்று எட்டிப்பார்த்துள்ளார். இரும்பு வலைக்கதவு போடப்பட்டு மூடப்பட்டிருந்த அந்த கிணற்றில் இளைஞர் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அதனைப்பார்த்த அர்ச்சகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார், விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் அந்த இளைஞரை கிணற்றிலிருந்து காப்பாற்றினர். 

கிணறு

பின்பு அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேய் துரத்துவது போல கனவு கண்டதால் ஓடிவந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.