விஜய் ரசிகர்கள் என்னைக்குமே டாப் தான்…! புகழ்ந்து தள்ளிய காவல்துறை துணை ஆணையர்!

 

விஜய் ரசிகர்கள் என்னைக்குமே டாப் தான்…! புகழ்ந்து தள்ளிய காவல்துறை துணை ஆணையர்!

நடிகர் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளி வெளியீடாக வருகிறது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு தீபாவளி ரிலீஸ் உறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளி வெளியீடாக வருகிறது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு தீபாவளி ரிலீஸ் உறுதியாகியுள்ளது.

police

சமீபத்தில் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் பேனர்களை வைக்காமல் நல உதவிகளைச் செய்து வருகிறார்கள். பிகில் படத்திற்காக திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் 12 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர்.

இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், ‘நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பிகில்’ திரைப்படத்தை முன்னிட்டு, கட்அவுட், ஃப்ளக்ஸ் பேனர் வைப்பதற்குப் பதிலாக சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பி அவரது நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர். காவல்துறை ஆலோசனை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேமராக்களை அமைத்து கொடுத்தனர். தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நெல்லை விஜய் ரசிகர்கள் முன் உதாரணமாய் திகழ்கிறார்கள்’ என்று பாராட்டினார்