விஜய் ரசிகர்களை வெளுத்து வாங்கிய போலீஸ்: கதறும் ரசிகர்களின் வீடியோ!
பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தமிழகமெங்கும் இன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பிகில் திரைப்படத்துக்குச் சிறப்பு காட்சிகள் இல்லை என அறிவிப்பு வெளியானதால் சோகத்திலிருந்த ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால் அனுமதி அளித்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்ததை அடுத்து மகிழ்ச்சியில் திளைத்தனர். நேற்றிரவு முதலே திரையரங்குகளில் கூடிய ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என் அதகளப்படுத்தினர்.
இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் அதிகாலை சிறப்பு காட்சிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கும், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீசார் விஜய் ரசிகர்களை அடி வெளுத்து வாங்கினர். மேலும் டிக்கெட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து சிலர் பிரச்னையில் ஈடுபட்டதால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.