விஜய் பிறந்தநாளுக்கு மாணவர்களுடன் இணைந்து சாந்தனு மனைவி செய்த செயல்!

 

விஜய் பிறந்தநாளுக்கு மாணவர்களுடன் இணைந்து சாந்தனு மனைவி செய்த செயல்!

நடிகை கீர்த்தி, விஜயின் பிறந்த நாள் அன்று தனது நடனம் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சென்னை: நடிகை கீர்த்தி, விஜயின் பிறந்த நாள் அன்று தனது நடனம் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தனது 45வது பிறந்த நாளை கடந்த 22ம் தேதி கொண்டாடினர். அதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் கேக் வேட்டி, திருவிழா போல் கொண்டாடினர். அது மட்டுமின்றி சில திரையரங்குகளில் விஜயின் டாப் ஹிட் படங்கள் ஒளிபரப்பப்பட்டன. மேலும் சிலர் அவரின் பெயரை சொல்லி ரத்த தானம் கொடுப்பது, ஏழை மக்களக்கு உணவு வழங்கியது என்று இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்தனர். 

இது ஒரு பக்கம் இருக்க அவருக்கு ஏராளமான ரசிகர்கள், நடிகர், நடிகைகள் என்று தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கம் மூலம் கூறி வந்தனர். அந்த வகையில் சாந்தனு மனைவியும், நடிகை கீர்த்தி என்கிற கிகி தனது வாழ்த்தை நடனம் மூலம் தெரிவித்துள்ளார். அதாவது அவர் நடத்தி வரும் நடன பள்ளியில் உள்ள மாணவர்களுடன் இணைந்து விஜய் பாட்டிற்கு நடனம் ஆடியுள்ளார். 

மேலும் நடிகரும், கீர்த்தியின் கணவருமான சாந்தனு தீவிர விஜய் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.