விஜய் தேவரகொண்டா பெயரில் போலி கணக்கு… பெண்களுக்கு வலை விரித்தவருக்கு போலீஸ் வலை

 

விஜய் தேவரகொண்டா பெயரில் போலி கணக்கு… பெண்களுக்கு வலை விரித்தவருக்கு போலீஸ் வலை

தெலுங்கில் மிகபெரிய வெற்றியை பெற்ற அர்ஜுன் ரெட்டி மூலம் நடிகர் விஜய் தேவரகொண்டா புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அதே நேரத்தில் அவர் பெயரில் ஊடகத்தில் போலி கணக்கு உருவாக்கி சிலர் பெண்களுக்கு வலை விரித்து அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள்.

தெலுங்கில் மிகபெரிய வெற்றியை பெற்ற அர்ஜுன் ரெட்டி மூலம் நடிகர் விஜய் தேவரகொண்டா புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அதே நேரத்தில் அவர் பெயரில் ஊடகத்தில் போலி கணக்கு உருவாக்கி சிலர் பெண்களுக்கு வலை விரித்து அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள்.

vijay-devkonds

இதனால் வருத்தமடைந்த விஜய் தேவரகொண்டா இதற்கு முடிவு கட்ட நினைத்து களத்தில் குதித்தார்,அதனால் அவர் சைபர் க்ரைமில் இந்த போலி கணக்கு மோசடி பற்றி புகார் தெரிவித்தார். மேலும் ,அவர் தனது உதவியாளர் மூலம் ஹேமா என்ற பெயரில் அந்த போலியான கணக்குக்கு ஒரு மெசேஜ் அனுப்பி அதற்கு அந்த போலியான நபரிடமிருந்து வந்த பதிலையும் இணைத்து போலீசில் புகார் கொடுத்துள்ளார் .இது பற்றி சைபர் க்ரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
விஜய் தேவரகொண்டா அடுத்ததாக தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். அனன்யா பாண்டே ஜோடியாக நடிக்கவுள்ளார். மும்பையின் வீதிகளில் நடந்த அந்த படப்பிடிப்பிலிருந்து அவர்களின் படங்கள் சமீபத்தில் வைரலாகின. பாலிவுட்டில்  இந்த புதிய ஜோடி வரவால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.