விஜய் சேதுபதி, ஜோதிகாவை எதிர்த்து போராட்டம்! – எச்.ராஜா அறிவிப்பு

 

விஜய் சேதுபதி, ஜோதிகாவை எதிர்த்து போராட்டம்! – எச்.ராஜா அறிவிப்பு

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் உள்ளது.

இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் விஜய்சேதுபதி, கமல், ஜோதிகாவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “பிரதமர் மோடியின் நடவடிக்கை காரணமாக இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் உள்ளது.

jyothika-and-vjs

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வரும். சினிமா நடிகர்கள் விஜய் சேதுபதி, கமல், ஜோதிகா போன்றவர்கள் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். ஊரடங்கு முடிந்த பிறகு இவர்களைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும்” என்றார்.