விஜய்-க்கு மெழுகு சிலை: நீதிமன்றம் சென்ற விஜய் ரசிகர்; கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிச்சம்!
ஸ்ரீ லட்சுமி தியேட்டரில் இரண்டரை அடி மெழுகு சிலை அனுமதி கேட்டோம்.அதற்கு திரையரங்கம் அனுமதி அளித்தது.
நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைத்து கொண்டாட போலீசார் அனுமதி மறுத்த நிலையில், ரசிகர் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
விஜய் நடிப்பில் நேற்று பிகில் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகியது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஸ்ரீ லட்சுமி தியேட்டரில் விஜய்-க்கு மெழுகு சிலை வைத்து கொண்டாட அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது.
இந்நிலையில் விஜய் ரசிகரான லட்சுமணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், நான் விஜய்யின் தீவிர ரசிகர். பிகில் திரைப்படத்தை முன்னிட்டு ஸ்ரீ லட்சுமி தியேட்டரில் இரண்டரை அடி மெழுகு சிலை அனுமதி கேட்டோம்.அதற்கு திரையரங்கம் அனுமதி அளித்தது.ஆனால் போலீஸ் மறுப்பு தெரிவித்தது. எனவே திரையரங்கு வளாகத்தில் அக்டோபர் 27-ம் தேதி வரை விஜய் மெழுகு சிலை அமைக்க அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவானது நேற்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர் மனுதாரராக தியேட்டர் உரிமையாளரைச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, வரும் 8 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைத்துள்ளனர்.