விஜய் குடும்பத்துடன் நடிகர் சூர்யா எடுத்த செல்ஃபி: கடுப்பான நெட்டிசன்கள்!

 

விஜய் குடும்பத்துடன் நடிகர் சூர்யா எடுத்த செல்ஃபி: கடுப்பான நெட்டிசன்கள்!

நடிகர் விஜய்யின் பெற்றோருடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய்யின் பெற்றோருடன் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் சூர்யா, விஜய் இருவரும் நேருக்கு நேர் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய பெரிய அண்ணா திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஃபிரெண்ட்ஸ் படத்தில் விஜய்யும் சூர்யாவும் கூட்டணி சேர்ந்தனர். 

இந்நிலையில் நடிகர் விஜய்யின் கார்  ஓட்டுநரின் மகள் நிச்சயதார்த்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோருடன் இணைந்து நடிகர் சூர்யா செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 

VIJAY TTN

முன்னதாக சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனைதட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து  தனது பிளாக்கில் எழுதிய நடிகர்  சூர்யா, பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது, தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல். அந்த அடிப்படையில் தான்   என் தந்தையார் அந்த இளைஞரின் செல்போனைதட்டிவிட்டார்’ என்று ஆவேசமாகப் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

SURYA TTN

அதே போல்  சமீபத்தில் கார்த்தியுடன்  செல்ஃபி எடுக்க வந்த கஸ்தூரியை, ‘செல்பி என்பதற்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்கறது இல்ல. முகத்துக்கு முன்னால் கேமராவை கொண்டு வந்து முன்னால் ஒரு ப்ளாஷ் பின்னால் ஒரு ப்ளாஷ் என கண்ணில் பட்டால் என்ன ஆகுறது. ஒரு விவஸ்தையே கிடையாது’ என்று சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார்.

இந்நிலையில் விஜய் பெற்றோருடன்  நடிகர் சூர்யா செல்ஃபி எடுத்துக் கொண்டதை அனுமதி பெற்று எடுக்கப்பட்ட புகைப்படமா என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.