விஜய் உயர்ந்த சிந்தனை உடையவர்: திருநாவுக்கரசர் புகழாரம்

 

விஜய் உயர்ந்த சிந்தனை உடையவர்: திருநாவுக்கரசர் புகழாரம்

முதல்வராக வேண்டும் என நடிகர் விஜய் நினைப்பது உயர்ந்த சிந்தனை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை: முதல்வராக வேண்டும் என நடிகர் விஜய் நினைப்பது உயர்ந்த சிந்தனை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசியது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு ஒருசேர ஆதரவும் எதிரப்பும் கிளம்பி வருகிறது. குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் விஜய்யை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகள் விஜய்யின் பேச்சை வரவேற்றுள்ளன.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய் முதல்வராக வரவேண்டும் என ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கிவிட்டு எம்எல்ஏ அமைச்சர் ஆவதை விட முதல்வர் ஆக வேண்டும் என விஜய் யோசிப்பது உயர்ந்த சிந்தனைதான் என்றார்.