விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் படத்தால் பதட்டமான இளம் இயக்குநர்கள்! இப்பிடியா பண்ணுவீங்க அட்லீ!?
தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு விளையாட்டை மையமாக வைத்து படம் எடுப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலேயே இருந்தாலும், இப்போதைய தலைமுறைக்கு வாடி வாசல் திறந்து வைத்தவர் இயக்குநர் சுசீந்திரன்
தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு விளையாட்டை மையமாக வைத்து படம் எடுப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த மாதிரியான படங்கள் தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலேயே இருந்தாலும், இப்போதைய தலைமுறைக்கு வாடி வாசல் திறந்து வைத்தவர் இயக்குநர் சுசீந்திரன்.
இவரது ‘வெண்ணிலா கபடி’ குழு படம் முழுக்க கபடியை பின் பற்றி எடுக்கப்பட்டிருக்கும். அதை தொடர்ந்து பலரும் விளையாட்டு தொடர்பான படங்களை எடுக்கத் தொடங்கினார்கள், எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சுசீந்திரனே,இருக்கிற எல்லா விளையாட்டை பற்றியும் ஒரு பக்கம் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் உங்களுக்கு தெரியுமா!
அந்த வரிசையில்,அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ள ‘ஜடா’படத்தில் நடித்து முடித்திருக்கிறார் மதயானை கூட்டம் ஹீரோ கதிர்..
இப்படத்தில் நடிகர் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்துள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இதுபோல் இன்னும் சில படங்கள் தயாரிப்பில் உள்ள நிலையில்தான் இளைய தளபதி விஜயை வைத்து அட்லீ இயக்கம் படமும் கால்பந்தாட்ட வீர்களைப் பற்றிய கதை.பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் தங்களது படத்தை ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்று வெறிகொண்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் குமரன்.
தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.டப்பிங் பணிகள் முடிந்ததும் போஸ்ட் புரடக்சன் வேலைகளை பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் பார்த்து படத்தை சென்ஸாருக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது படத்தோட டீம்.
அட்லீ இப்படியொரு ‘கதை’யை எடுத்துக்கிட்டு வருவார் என்று தெரியாததால்,பல சின்ன பட தயாரிப்பாளர்கள் பதட்டத்தோடு இருக்கிறார்கள்.
பயப்படாம கிரவுண்டுல இறங்குங்க மக்கா…ஈஸியா கோல் போட்டுறலாம்!
இதையும் படிங்க: உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி!