விஜய்யால் எம்ஜிஆர் ஆக முடியாது; ரஜினிக்கு மட்டுமே மக்கள் செல்வாக்கு: பொன்னார் தாக்கு

 

விஜய்யால் எம்ஜிஆர் ஆக முடியாது; ரஜினிக்கு மட்டுமே மக்கள் செல்வாக்கு: பொன்னார் தாக்கு

அனைவராலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக ஆக முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னை: அனைவராலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக ஆக முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். தான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் உண்மையாக இருப்பேன் என்றும், ஒருவேளை முதல்வரானால் ஊழலை ஒழிப்பேன் என்றும் பேசினார்.

நடிகர் விஜய்யின் அரசிய தொடர்பான இந்த பேச்சு பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அனைவராலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக ஆக முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்றார்.

மேலும், நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்பேன் என கூறிய பொன் ராதாகிருஷ்ணன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை திமுக எதிர்ப்பது வேலையற்ற வேலை எனவும் தெரிவித்தார்.