விஜய்சேதுபதியின் அடுத்த பட நாயகி இவர்தானா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியாகியுள்ளது
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு வெற்றிப்படங்களைக் குவித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே வெற்றி நாயகனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடித்து வரும் ‘மாமனிதன், ”சூப்பர் டீலக்ஸ்’, ‘சிந்துபாத்’, ‘சயிர நரசிம்மரெட்டி’, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் ‘ஸ்கெட்ச்’ பட இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் அல்லது ராஷிகண்ணா நடிக்கவிருப்பதாகப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அதில் ராஷிகண்ணா நடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ராஷிகண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். விஜய்சேதுபதி, விஜய்சந்தர், விஜயா புரடொக்சன்ஸ் இணையும் இப்படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சில ஆச்சரியமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.
Very happy to announce my next with one of my favourite actors @VijaySethuOffl
Really looking forward to working with the team.. ☺️ @vijayfilmaker @VijayaProdn
Also, some more exciting announcements on the way ?— Raashi Khanna (@RaashiKhanna) January 29, 2019