விஜயபாஸ்கரை நெருக்கும் சிபிஐ… முதல்வருடன் சந்திப்பு

 

விஜயபாஸ்கரை நெருக்கும் சிபிஐ… முதல்வருடன் சந்திப்பு

குட்கா விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ இரண்டு நாட்களாக விசாரித்த சூழலில் முதல்வர் பழனிசாமியை அவர் இன்று சந்தித்தார்.

சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ இரண்டு நாட்களாக விசாரித்த சூழலில் முதல்வர் பழனிசாமியை அவர் இன்று சந்தித்தார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ததற்காக மாதவராவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறையின் மூத்த அதிகாரிகளின் பெயர் அடிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குட்கா வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி சிபிஐ இவ்விவகாரத்தில் தனது விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேற்றும், நேற்று முன் தினமும் தீவிர விசாரணை நடத்தியது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.