‘விஜயபாஸ்கரும், டிஜிபியும் ஊழல் கரும்பறவைகள்’ – மு.க.ஸ்டாலின் சாடல்

 

‘விஜயபாஸ்கரும், டிஜிபியும் ஊழல் கரும்பறவைகள்’ – மு.க.ஸ்டாலின் சாடல்

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜிந்திரன் ஆகியோரின் அரசாங்க பொறுப்புகளை உடனடியாக பறிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜிந்திரன் ஆகியோரின் அரசாங்க பொறுப்புகளை உடனடியாக பறிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, கடந்த 2016ம் ஆண்டு சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா விற்பனை செய்வதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போதைய தமிழக காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மூத்த உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் குறித்த தகவல்கள் வருமானவரித் துறையிடம் சிக்கியதாகக் கூறப்பட்டது.

dgp rajendran

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்பின், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள்! இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை நாட தயங்காது!

ஊழல் கறைபடிந்து வெட்ட வெளிச்சமாகிய பின்னும், இருவரும் பதவியில் நீடிப்பது நியாயமா? pic.twitter.com/9PYbMa3jF4

— M.K.Stalin (@mkstalin) December 21, 2018

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள் என்றும் உருவரின் அரசு பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால், உச்சநீதிமன்றத்தை நாடவும் திமுக தயங்காது என தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.