விஜயகாந்த் வீட்டில் பசு மாடுகள் திருட்டு

 

விஜயகாந்த் வீட்டில் பசு மாடுகள் திருட்டு

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் புதிதாக கட்டி வரும் வீட்டில் இருந்து இரண்டு பசு மாடுகள் மாயமாகியுள்ளன

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் புதிதாக கட்டி வரும் வீட்டில் இருந்து இரண்டு பசு மாடுகள் மாயமாகியுள்ளன.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கத்தில் அவர் புதிதாக வீடு ஒன்றை அவர் கட்டி வருகிறார்.

அந்த வீட்டில் செல்லப்பிராணிகளும் கால்நடைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காட்டுப்பாக்கம் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பசு மாடுகள் திடீரென மாயமாகியுள்ளன. இதுகுறித்து  பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.