விசா இல்லாமல் பாகிஸ்தான் செல்லும் இந்தியர்கள்! ராவி நதிக்கரையில் கொண்டாட்டம்!

 

விசா இல்லாமல் பாகிஸ்தான் செல்லும் இந்தியர்கள்! ராவி நதிக்கரையில் கொண்டாட்டம்!

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்ததாக அவரது அபிமானிகளால் நம்பப்படுகிறது. இந்நிலையில் குருநானக்  நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் உள்ள கர்தார்பூர் தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்ததாக அவரது அபிமானிகளால் நம்பப்படுகிறது. இந்நிலையில் குருநானக்  நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் உள்ள கர்தார்பூர் தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது.

visa

குருத்வாராவிற்கு சீக்கியர்கள் விசா இன்றி புனிதப் பயணம் மேற்கொள்ள இந்தியாவின் குருதாஸ்பூரையும், பாகிஸ்தானின் கர்தார்பூரையும் இணைக்க சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பக்தர்களை அனுமதிப்பது குறித்து மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் அட்டாரியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இருபது அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முன்னதாக இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதற்கு சேவை கட்டணம் பெற பாகிஸ்தான் விரும்புவதாகவும், ஆனால் இந்தியா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

officers

அதே நேரத்தில் இந்திய அதிகாரிகள் குருத்வாராவில் இருக்க அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும் பின்னர் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நவம்பரில் குரு நானக் 150-ஆவது பிறந்த நாளையொட்டி கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.