விசாரணை ஆணையத்தில் ஆஜராகிறார் விஜயபாஸ்கர்

 

விசாரணை ஆணையத்தில் ஆஜராகிறார் விஜயபாஸ்கர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகிறார்.

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜராகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஜெயலலிதா மரணத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பை பற்ற வைத்தார். 

இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கடந்த டிசம்பர் 18ம் தேதி ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஆணையத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர்  கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும் ஆணையம் சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக இருக்கிறார்.