விசாரணைக்காகக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை !

 

விசாரணைக்காகக் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை !

இவர் போலி நகைகளைக் கொடுத்து ரூ.25 லட்சம் மோசடி செய்து விட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன் என்பவரின் மகன் அஜித்குமார். இவர் போலி நகைகளைக் கொடுத்து ரூ.25 லட்சம் மோசடி செய்து விட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க போலீசார் அஜித்குமாரை தேடி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அஜித்குமார் இல்லாததால் அவரது தந்தை மகேந்திரன் மற்றும் அண்ணன் பாண்டியன் ஆகிய இரண்டு பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

ttn

தன்னை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தனது தந்தை மற்றும் அண்ணன் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டதை அறிந்த அஜித்குமார், காவல்நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்று, கழிவறையிலேயே தனது துண்டை பயன்படுத்தித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.