விசாக நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய சித்தர் !

 

விசாக நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய சித்தர் !

விசாக நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய சித்தரினை பற்றியும் அவரது மேன்மைகளை பற்றியும் பார்போம்.

விசாக நட்சத்திரத்திற்க்கு உரிய சித்தர் குதம்பை சித்தர் ஆவார். குதம்பை சித்தர் அவர்கள் தஞ்சாவூர் அருகில் அவரது பூர்வீகம் இருக்க கூடும் என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

kuthambai1

இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் ,பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

குதம்பைச்சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார் என்றும் பல்வேறு நூல்களில் தெரிவித்துள்ளனர்.

இவரது அன்னைக்கு பெண் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் அதிகம் அதனால் குதம்பை சித்தர் ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல அலங்காரங்கள் செய்து அடிக்கடி மகிழ்வது குதம்பை சித்தரின் தாய்க்கு நடைமுறையாக இருந்துள்ளது .

குதம்பை சித்தர் இயற்கையிலேயே மிகவும் அழகாக இருப்பார். அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலேயே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறிகொடுப்பாள் அன்னை .

kuthambai3

அந்த அணிகல பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்துவிட்டாள் . அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கண நேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள் குதம்பை சித்தரின் அன்னை.

அப்படி ஒரு பேரன்பு அவன் மீது அவளுக்கு இருந்து வந்தது . மகனுக்கு 16 வயதானது ஆனாலும் அம்மா பிள்ளையாகத் தான் இருந்தார் குதம்பை சித்தர். ஒரு நாள், ஒரு சித்தரை அவர் சந்திக்க நேர்ந்தது. 

அந்த சித்தர் குதம்பை சித்தரிடம் குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன் . உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள்.

ஆனால் அது நடக்காது, காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காண முடியாத படி விதி தடுத்து விட்டது. 

kuthambai

உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒரு நாள் பெரும் புயலடித்தது.

ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ இந்த பிறவியில் பிறந்திருக்கிறாய்.

தவத்தின் மேன்மைகளை பற்றியும் யோக சாதனைகள் பற்றியும்  குதம்பை சித்தருக்கு எடுத்துச் சொன்னார்.அவரது ஆலோசனைகளை குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றை எல்லாம் கேட்டு கொண்டார் .

தன்னை ஆசிர்வதித்து ,இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் ஆசியளித்து விட்டு அதன் பின்னர் தாயாரிடம் சென்றார் குதம்பை சித்தர் . 

kuthambai

அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். அப்போது தான் அம்மாவிடம் குதம்பையார் சித்தர் ஒருவரை சந்தித்ததையும் அவர் கூரிய அறிவுரைகளையும் எடுத்து சொன்னார்  குதம்பை சித்தர். அதனை கேட்ட குதம்பை சித்தரின் அம்மா அதிர்ச்சி அடைந்தார். 

உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெரும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை. என்று குதம்பை சித்தரின் அம்மா அவரிடம் மன்றாடினார் .

அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம் ,முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும்,அப்பவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். 

குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமா நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்ததுடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வ ஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது ஆனால் குதம்பையாருக்கு அது தெரியவில்லை. 

kuthambai

அங்கு நின்று கொண்டு இருந்த அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார் குதம்பை சித்தர் . கடும் தவத்தினை மெச்சிய இறைவன் அவர் கண் முன் வந்து குதம்பை நீ வைகுண்டம் வர வேண்டாம். 

உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் பல்வேறு நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில் இங்கே பல யானைகள் இருக்கின்றன. 

இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு . உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கின்றேன். இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய்.

அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும் என்றார் இறைவன்.

குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்து. யார் வாசியோகம் என்ற கலையைப் பயின்று .

ஆழ்ந்து நிலையில் இறைவனை வணங்குகிறரோ ,அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால் இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

kuthambai

இந்த அறிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சிலைக்கு அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜைகள் செய்தால் மழை இன்றும் பொழியும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.