விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில்‘ஓய்ந்தது பரப்புரை!’ 

 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில்‘ஓய்ந்தது பரப்புரை!’ 

நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காம்ராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்தது.

நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடக்கவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காம்ராஜ் நகர் தொகுதிகளில் பரப்புரை ஓய்ந்தது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகின்ற 21ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து இரண்டு வாரங்களாக திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

பரப்புரை

இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு முடிவடைய வேண்டும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்திருந்தார். இதையடுத்து, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளியூரைச் சேர்ந்த வாக்காளர்கள் வெளியேற தொடங்கினர். வாக்குச்சேகரிப்பு நிறுத்தப்பட்டது.