விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளரை அறிவித்தது தி.மு.க…

 

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளரை அறிவித்தது தி.மு.க…

தி.மு.க சார்பாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நேர்காணலில் தேர்வாகிய புகழேந்தி போட்டியிடுவார் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளதாக தகவல்கல் வெளியாகின்றன. 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து நாங்குநேரியில் காங்கிரஸும் விக்கிரவாண்டியில் தி.மு.க வும் போட்டியிடப்  போவதாக தி.மு.க தலைவர் போவதாக ஸ்டாலின் அறிவித்தார். 

DMK

தி.மு.க சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்வது நேற்று நிறைவடைந்தது. அதன் பிறகு விக்கிரவாண்டியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் தி.மு.க வின் தலைமையில் நேர்காணல் நடத்தப் பட்டது. 

இதனையடுத்து தி.மு.க சார்பாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நேர்காணலில் தேர்வாகிய புகழேந்தி போட்டியிடுவார் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளதாக தகவல்கல் வெளியாகின்றன.