விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்கு இயந்திரம் கோளாறு..!

 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்கு இயந்திரம் கோளாறு..!

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் விறுவிறுப்பாக வாக்களிக்கத் துவங்கிய நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 235ஆவது எண் கொண்ட வாக்கு இயந்திரம் பழுதடைந்துள்ளது. 

Voting machine

இதனால், அந்த தொகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.