விக்கிரவாண்டியில் குளவி கொட்டியதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு!

 

விக்கிரவாண்டியில் குளவி கொட்டியதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு!

புதுச்சேரி மாநில மணவெளி தொகுதியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த புருஷோத்தமன், குளவி கொட்டியதில் உயிரிழந்தார். 

புதுச்சேரி மாநில மணவெளி தொகுதியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த புருஷோத்தமன், குளவி கொட்டியதில் உயிரிழந்தார். 

MLA

புதுச்சேரி மாநில அ.தி.முக. செயலாளராகவும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவாகவும் இருப்பவர் புருஷோத்தமன். இவர் தனது சொந்த கிராமமான விக்கிரவாண்டியில் சொந்தமாக விவசாயம் செய்துவருகிறார். அங்கு விவசாயப் பணிகளை மேற்பார்வையிட்டு வந்த புருஷோத்தமனை விஷத்தன்மை வாய்ந்த செங்குளவி, ஒன்று கொட்டியது. இதனால் துடித்துப் போன புருஷோத்தமன் வலி தாங்க முடியாமல் அலறினார். இதைப் பார்த்த அருகில் இருந்த விவசாயிகள் அவரை அருகிலிருந்த முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். விஷ வண்டு கடித்து புருஷோத்தமன் மறைந்த சம்பவம் புதுச்சேரி மாநில அதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.