வாழ்வின் யதார்த்தம் சமாதானம்: நண்பர்களாக மாறிய அபி – மீரா! 

 

வாழ்வின் யதார்த்தம் சமாதானம்: நண்பர்களாக மாறிய அபி – மீரா! 

எலியும், பூனையுமாக அடித்துக் கொண்ட அபிராமி மற்றும் மீரா நண்பர்களாக மாறியுள்ளது போல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: எலியும், பூனையுமாக அடித்துக் கொண்ட அபிராமி மற்றும் மீரா நண்பர்களாக மாறியுள்ளது போல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால்க்கு பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் இணைந்து ஷெரின் மற்றும் வனிதாவும் இணைந்து அவரை டார்கெட் செய்ய ஆரம்பித்ததால், வேதனை தாங்க முடியாமல் மீரா நேற்று கதறி அழுதார். 

அதைத்தொடர்ந்து இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கார்டன் பகுதியில் பாத்திமா பாபுவிடம், தன்னை பார்த்து யாராவது பொறாமைப் பட்டால் தாங்கி கொள்ளவே முடியாது என்று சொல்லிக் கதறி அழுகிறார். அதை பார்த்த அபிராமி, அவருக்குள் இருக்கும் பகையை மறந்து அவருக்காகத் தண்ணீர் எடுத்து வந்து தருகிறார். 

அவறின் இந்த செயலை கண்டு மீரா, சிரிப்பது போன்று அந்த புரோமவில் காட்டப்பட்டுள்ளது. ஆகையால் இனிமேல் இவர்கள் இருவரும் சண்டை இல்லாமல் சமாதானமாக இருப்பார்கள் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.