வாலிபரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பீகார் தம்பதி: ஈரோட்டில் பரபரப்பு !

 

வாலிபரை  துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பீகார் தம்பதி: ஈரோட்டில் பரபரப்பு !

இளைஞர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு: இளைஞர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தை சேர்ந்த நவீன்குமாரும் அவரது மனைவி மனைவி சசிகலாவும் கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் பீகார் செல்ல, அங்கு ரயிலில் நிதிஷ்குமார் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர் திண்டுக்கல்லில் பனி செய்து வந்த நிலையில், ஈரோடு வந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி அழைத்துள்ளனர். 

crime

இதையடுத்து நவீன்குமார் பேச்சை நம்பி ஈரோடு வந்த  நிதிஷ்குமாருக்கு வேலை  வாங்கி கொடுக்காமல், ஒரு அறையில் பூட்டி வைத்து துன்புறுத்தியதோடு, அதை வீடியோவாக எடுத்து நிதிஷ்குமாரின் தாயாருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமாரின் தாய், போலீசில் புகார் அளிக்க, செல்போன் எண்ணை  வைத்து  குஜிலியம்பாறை போலீசார் ஈரோடு விரைந்தனர். 

murder

பின்னர்  ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் போலீசார் நவீன்குமாரின் வீட்டை சோதனையிட்டபோது, சாக்கு மூட்டைக்குள் கை, கால், உடல் என துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் நிதிஷ்குமார் பிணமாக கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

nithsh

விசாரணையில், நிதிஷ்குமாரை கடத்தி பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் அவரது தாயை ,மிரட்டி பணம் கேட்டதாகவும், அவர் கொடுக்காத ஆத்திரத்தில் நிதிஷை கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட, நவீன்குமார்,  அவரது மனைவி சசிகலா,  ராகுல் தத்தா என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் வாசிக்க: இந்திய குடிமகளாக எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது! கொந்தளித்த அப்போலோ ஆஸ்பத்திரி வாரிசு!?