‘வாலமீனு’ மாளவிகா சினிமாவிலிருந்து விலக இவர் தான் காரணம்: பிரபல நடிகரை கைகாட்டிய ஸ்ரீ ரெட்டி

 

‘வாலமீனு’ மாளவிகா சினிமாவிலிருந்து விலக இவர் தான் காரணம்: பிரபல நடிகரை கைகாட்டிய ஸ்ரீ ரெட்டி

நடிகை மாளவிகா திரைத்துறையிலிருந்து விலக தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் அளித்த பாலியல் தொல்லை தான் காரணம் என்று ஸ்ரீ ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சென்னை: நடிகை மாளவிகா திரைத்துறையிலிருந்து விலக தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் அளித்த பாலியல் தொல்லை தான் காரணம் என்று ஸ்ரீ ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையைக் களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் கூறியிருந்த ஸ்ரீ ரெட்டி, ராஜேந்திர பிரசாத் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மனிதர், தயவு செய்து அவரை மனநல மருத்துவமனையில் அனுமதியுங்கள். உங்களது அகராதியில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்பது தெரியும். உங்களைப் பற்றிய தெளிவான ரகசியங்களை விரைவில் வெளியிடுகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

malavika

இதையடுத்த தனது ஃபேஸ்புக் பதிவில், மாளவிகா நடிப்பதை நிறுத்துவதற்குக் காரணம் தெலுங்கு பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத் தான் என்று பதிவிட்டுள்ளார். அதில், ‘தெலுங்கு நடிகர்கள் கூட்டமைப்பான மா சங்கத்திலிருந்து 6 மாதத்தில் வெளியேறக் காரணம் என்ன. அது குறித்து அனைவரும் அறிவர். நடிகை மாளவிகா திரைத்துறையிலிருந்து திடீரென ஏன் ஒதுங்க வேண்டும். ராஜேந்திர பிரசாத் பெண் கலைஞர்கள் பலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியும். அவரின் மகள் ஏன் வீடைவிட்டு ஓடினார். நடிகை ஹீமா ஏன் உங்களுடன் ஏன் சண்டையிட்டார். மூத்த நடிகர் என்ற பெயரில் உங்கள் மேல் மரியாதை வைத்துள்ளேன். ஆனால் மனிதனாக அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ ரெட்டியின் இந்தப் பதிவு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.